Showing posts with label சென்னைத்தமிழன். Show all posts
Showing posts with label சென்னைத்தமிழன். Show all posts

நட்பதிகாரம்


# நட்பதிகாரம்

நண்பன்
தோள் தொடுகையில்
வானம் தலை முட்டி
மேகம் துவட்டும்
திறந்த வாசலில் தென்றல்
நுழைந்து நலம் விசாரிக்கும்
சந்திப்பு நிகழும்
போதெல்லாம்
சந்தன வாசம் கமழும்
தரையில் கால்படாது
புவிஈர்ப்பு விசை
பொய்த்துப்போகும்
அத்தருணத்தில்
துன்பமே அருகில் வா
உனை காலால் உதைக்கிறேன்
(இடம் - பியாஸ் நதிக்கரை, இமாச்சல பிரதேசம்)

Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments