திரும்பத் திரும்ப பேசற நீ..... திரும்பத் திரும்ப....



திரும்பத் திரும்ப பேசற நீ….. திரும்பத் திரும்ப…

கூறியவை கூறல் குற்றம் என நன்னூல் சென்னதின் பிறகு அரைத்த மாவை அரைப்பது பெருங்குற்றமாகவே கருதப்படும். அதற்காகவே ’சொல்லுக சொல்லை பிரிதோர்ச்சொல்’ என்கிறார் வள்ளவ பெருந்தகை.

அதெல்லாம் சரி, காலையில் சாப்பிட்டதே கேள்விக்குறியாகி தொக்கி நிற்கும் போது எழுதிய சொல் எத்தனை முறை மீண்டு முட்டுகிறது என்கிற புள்ளி விவரத்தையெல்லாம் யார் சொல்ல முடியும். சண்டை சந்தடியில் யாராவது ’வார்த்தய அளந்து பேசு’ என்றால் அதுவும் சாத்தியமே என்கிறது ஒரு வலைப்பதிவு.

வலைப்பதிவாளர் நீச்சல்காரன் அதை சாத்தியமாக்கியும் இருக்கிறார். சுளகு என்ற மென்பொருளில் நாம் வடித்த கருத்துக் கோவை(?)யினை மொத்தமாக உள்ளீடு செய்யுங்கள்.

எந்த சொல் மீண்டும் மீண்டும் வருகிறது. எந்த எழுத்து எத்தனை இரட்டை வேடம் எடுக்கிறது என்பதை துள்ளியப் படுத்துகிறது இந்த எழுத்தாய்வுக் கருவி.

ஒரு கூடுதல் செய்தி....
மு.வ வின் திருக்குறள் உரையில் ‘என்று’ எனும் சொல்லும் கலைஞரின் உரையில் ”வேண்டும்” என்ற சொல்லினை அதிகம் பயன்படுத்தியுள்ளார்.

நமது எழுத்துகளை முறைப்படுத்த நீங்களும் இந்த வலைத்தளத்தில் முயன்றால் நலம் #

 சென்னைத்தமிழன்

இணையதள முகவரிhttp://dev.neechalkaran.com/p/sulaku.html#.VqXZipp97IU
Neechalkaran
Sulaku - சுளகு
A Tamil letter Analyzer தமிழ் எழுத்தாய்வுக் கருவி

எஸ்க்கியூஸ்மி உங்க கம்ப்யூட்டர்ல தமிழ் இருக்கா?





காலை விழித்தது முதல் இரவு உறக்கம் வரையில் கணினியின் பயன்பாடு இல்லாமல் நாள் கழிவதில்லை.

சர்வரோக நிவாரணியாக இருந்து வரும் கணினியில் நம்முடைய தாய் மொழி இல்லையெனில் அது நமக்கு அவமானமே.

ஆம். நாம் கணினியில் தமிழ் உள்ளீடு செய்வோம்.
ஒரு எளிய மென்பொருளை தரவிறக்கம் செய்வோம்.

Google தேடு பொறிக்கு சென்று NHM Writer என தட்டச்சுங்கள். அதற்கான வலைபக்கத்திற்கு சென்று அந்த மென்பொருளை தரவிரக்கம் செய்யுங்கள். சுமார் 1 எம்பி மட்டுமே கொள்ளவு உடைய சிறிய கோப்பு இது. சில நொடிகளில் வேலை முடிந்துவிடும்.

இப்போது மென்பொருளை, தமிழ் என தேர்வு செய்து நிறுவுங்கள். வலப்புறம் கீழே ஒரு மணி போன்றதொரு சின்னம் இருக்கும். அதனை சுட்டிக் கொண்டு இடப்புறம் சொடுக்கினால் 8 வழி முறைகள் கிடைக்கும்.

இப்போது தமிழ்99 என தேர்வு செய்யுங்கள்.
மணி இப்போது தங்க நிறமாக மாறும். தங்கம் வந்துவிட்டாலே தமிழ் வந்துவிட்டது என்றே அர்த்தம்.

மொழி மிகச்சிறந்த ஆயுதம். NHM writer அற்புதமான கருவி.
தாய் மொழி தமிழில் களமாடுங்கள் தோழர்களே…
எழுத்து தெய்வம்!
எழுதுகோலும் தெய்வம்! - பாரதி
எழுத்து தெய்வம் நம் கணினியில் குடி கொள்ளட்டும்

# சென்னைத்தமிழன்

தமிழ் எழுத்துணரி (OCR)

தொட்டல் பூ மலரும்!!!
தொடாமல் தமிழ் மலரும்!!!

ஒரு நூலில் முக்கிய குறிப்பொன்றை பார்க்கிறோம். அதனை மேற்கோள் காண்பிக்கவோ அல்லது பயன்படுத்தவோ முயற்சி செய்கிறீர்கள். . இப்போது அதை முழுமையாக நாம் தட்டச்சு செய்ய முற்படுகிறீர்கள். ஆனால் அப்படியெல்லாம் நீங்கள் மெனக் கெட வேண்டியதில்லை என்கிறது கணி தொழில் நுட்பம்.

OCR எனும் Optical charecter reader எழுத்துணரியின் பயன்பாடு இப்போது பதிப்புகில் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. அனைத்து எழுத்து வடிவங்களையும் உணர்ந்து அதை ஒருங்குறி எழுத்தாக (Unicode Font) மாற்றும் கருவி. இனி தமிழில் வெகு நாட்களாக நிலவி வந்த எழுத்துரு பிரச்சனை ஓரளவு முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாகவே இதனைக் கருதுகிறேன்.

இதனை எப்படி பயன் படுத்த வேண்டுமெனப் பார்ப்போம். . எந்தப் பகுதியை Text ஆக மாற்ற வேண்டுமோ அதனை உங்கள் கைப்பேசி கொண்டு நிழற்படமெடுங்கள். இப்போது இதனை கூகுள் டிரைவில் சேமித்து வையுங்கள். கோப்பினை pdf ஆகவோ அல்லது jpg கோப்பாகவோ சேமிக்கலாம் அது உங்கள் விருப்பம். 

உங்களின் கணினியில் கூகுள் டிரைவ் சென்று அக்கோப்பினை சுட்டி கொண்டு வலது க்ளிக் செய்யுங்கள். Open with … google doc என கோப்பினை திறந்தால் Image ஆக உள்ள எழுத்துகள் அனைத்தும் ஒருங்குறி எழுத்தாக மாறி இருப்பதைக் காணலாம். அதாவது படமும் உரைநடையும் உங்களுக்கு கிடைக்கும்.

இதனை நகலெடுத்து எல்லா விதமான தரவு உள்ளீட்டிற்கும் பயன்படுத்தலாம். பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்த பழைய ‘லை’ கூட இந்த எழுத்துணரி மாற்றித் தருகிறது என்பது வியப்பான செய்தி.

தமிழில் நல்ல எழுத்துணரி இல்லை என்ற நெருடல் நீண்ட நாட்களாகவே நமக்கு ஒரு குறையாக இருந்தது. அது இப்போது கூகுளின் முயற்சியால் நீங்கி இருப்பது. ஒரு உவப்பான செய்தி # சென்னைத்தமிழன்


தமிழில் குறுஞ்செய்தி அனுப்பத் தெரியுமா.....



உங்களுக்கு தமிழில் குறுஞ்செய்தி அனுப்பத் தெரியுமா?
பல பேருக்கு அனுப்ப விருப்பம். ஆனால் எப்படி தமிழ் விசைப்பலகை மொபைலில் நிறுவுவது. அதனை எப்படி தட்டச்சு செய்ய வேண்டும் என்ற கேள்வியும் தயக்கமும் நாம் நமது தாய் மொழியில் எண்ணங்களை பகிர முடியாமல் நம்மை முடக்கி வைக்கும்.
அப்படி தமிழில் செய்திகளை அனுப்ப வேண்டும் என்ற ஆவல் இருப்பவர்களுக்கு ஒரு எளிய வழி இருக்கிறது.

உங்களது ஆன்ராய்ட் மொபைலில் play store செல்லுங்கள். Google Handwriting input என தட்டச்சுங்கள். இப்போது இந்த செயலியை நிறுவுங்கள். இதில் language input ல் தமிழ் என தேர்வு செய்து முயற்சி செய்யுங்கள். 99 விழுக்காடு துல்லியமாக வேலை செய்கிறது. உங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு எழுத ஆரம்பியுங்கள். கோழி கிறுக்கல் கையெழுத்தைக் கூட அழகாக எழுத்துருவாக TEXT ஆக மாற்றுகிறது. இது ஒருங்குறி எழுத்தாக மாறுவதால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ, வாட்ஸ்ஆப் செய்தியோ தமிழில் தங்கு தடையின்றி பகிரலாம்….

தமிழ் எல்லா தொழில் நுட்பத்திற்கும் அணியமாகி வருகிறது. தாய்மொழி வேகத்திற்கு நாம் செல்லவில்லை எனில் வரலாறு ஒரு போதும் நம்மை மன்னிக்காது # சென்னைத்தமிழன்

நானே கேள்வி # நானே பதில் #

நானே கேள்வி #நானே பதில் #  சென்னைத்தமிழன் #

கேள்வி - இந்த உலகத்தை இயக்கி கொண்டிருக்கும் மந்திரம் என்ன?

சிவதி பதில் - இதிலென்ன சந்தேகம். இரண்டெழுத்து மந்திரம் "பசி"தான்.

நம்ப முடிய வில்லையா மு.சுயம்புலிங்கம் எழுதிய கவிதையை படியுங்கள்

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை.....


எப்படி கவிதை. இப்ப ஒத்துக்கத்தானே வேணும் # சென்னைத்தமிழன் #

நானே கேள்வி # நானே பதில் #

நானே கேள்வி # நானே பதில் # சென்னைத்தமிழன் 

கேள்வி நமது அலுவலகத்தில் சத்துணவு திட்டப்பிரிவு உள்ளது. அதில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பணி புரிகிறார்கள்.  அவர்களுக்கு விடுப்பு உண்டா?

சிவதி பதில் ஆம். ஒரு மாதத்திற்கு ஒரு நாள் வீதம்  ஆண்டிற்கு 12 தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.  அவர்களுக்கு ஒரு நிபந்தனை உண்டு.

 ஆனால் விடுப்பை அந்தந்த மாதமே துய்க்க வேண்டும். அந்த விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டு (சத்துணவு ஊழியர்கள் சங்கம் போராடிய பிறகுதான்) ஆணை வெளியிடப்பட்டது.

 அதாவது ஒரு மாதம் எடுக்காமல் விட்ட விடுப்பை அடுத்த மாதம் சேர்த்து எடுத்து கொள்ளலாம். அத் தற்செயல் விடுப்பு இரண்டு நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுப்பு எடுக்கும் நாளில் உணவு செய்முறை மற்றும் வழங்களில் யாதொரு குறைபாடுமின்றி மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்ல வேண்டும்
(அரசு ஆணை. சத்துணவு திட்டத்துறை நிலை 166 நாள். 30.12.2009) # சென்னைத்தமிழன்#


நானே கேள்வி # நானே பதில் #

 நானே கேள்வி # நானே பதில் # சென்னைத்தமிழன்

கேள்வி – ஊராட்சி ஒன்றியம் / கிராம ஊராட்சி பொதுவான அங்காடிகளை ( Public Market) ஏற்படுத்த என்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் ?

சிவதி பதில் –  ஊராட்சி ஒன்றியமோ அல்லது கிராம ஊராட்சியோ பொது அங்காடிகளை (Public Market ) உருவாக்க வேண்டுமென கருதினால் முதலில் மன்றத்தில் தீர்மாணம் இயற்ற வேண்டும். அதன் பின்னர் ஊராட்சி ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியர்) இடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற பின்னரே அங்காடியை திறக்க வேண்டும்.  அவ்வுத்திரவில் உரிமக்கட்டணம், எப்போது திறக்க வேண்டும் மூடவேண்டும்,

அங்காடியில் விற்கும் பொருட்களுக்கான கட்டணத்தை ஒன்றிய ஊராட்சி அவை மற்றும் கிராம ஊராட்சி அவை (நேர்வுக்கு ஏற்ப) நிர்ணயிக்க  மற்றும் கட்டுப்படுத்த அதிகாரம் உள்ளது.   த.நா.ஊ. சட்டம் விதி எண். 147 #  சென்னைத்தமிழன்

Newer Posts Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments