நண்பன் மகன் முகிலனுக்கு...

முகிலனுக்கு.....

நான்காவது படிக்கும் போது அப்பாவும் நானும்,

 சின்னத்தெரு மலையாளத்தான் கடையில் இடியுருண்டை வாங்கி சாப்பிடுவோம். 25 பைசா. 

அதுவே நானும் அவனும் சேர்ந்து காசு போட்டுத்தான் ஒரு இடியுருண்டை வாங்குவோம்.

 எங்களுக்கு எப்போதுமே 25 பைசா அளவுக்கு packet money கிடைத்ததில்லை 🙂


ஒரு உருண்டைய ரெண்டு பேரு உடச்சுதான் சாப்பிடனும் இல்லையா?

"எச்சையா பச்சையா?

வானாமா பூமியா?

அம்மாவா அப்பாவா? புதிர் போரட்டு எச்சில் கடி கடித்து, பாதி பாதி சாப்பிடுவோம்.


சாப்பிட்டுக்கொண்டே, 
அப்படி என்ன கதை பேசுவோம்னு என்று நினைவில் இல்லை.

 அந்த தென்னந்தோப்பு வாராவதி அருகே (மாணிக்கம் ஸ்டோர் பக்கத்துல இருக்கு) அமர்ந்து பேசாத கதைகள் இல்லை.

 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'ன்னு ஒரு படம்... அந்த படம் உங்கப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். எப்போ பேசனாலும், அந்த படம் பற்றி பேசுவான்.


எங்க அப்பாவோ, இல்ல உங்க தாத்தாவோ அந்த வழியே வந்தால்

 "டேய், இந்த நேரத்துல என்னடா பணறீங்க, என்ற சிறு அதட்டலில் அங்கி்ருந்து கலைவோம்...

மறுநாள் மீண்டும், அதே வாராவதி... 
தீராத கதைகளை பேசி பேசி தீர்த்தோம்.

இன்று
வாராவதி வற்றிவிட்டது... எங்கள் நட்பு வற்றாத ஜீவ நதியாக அணைகளை உடைத்து பெருக்கெடுத்து ஓடுகிறது..  

எங்களுக்குள்ளும் சண்டை வரும், ஆனால் அரை மணி நேரம் கூட நீடித்ததில்லை.


ஒரு முறை
செய்யாத தப்புக்கு ஒரு குடிகாரன் என்னை அடிக்க, அந்த குடிகாரனை தட்டிக்கேட்டு உங்கப்பா அடிவாங்கின கதையெல்லாம் கைவசம் இருக்கு (அப்போ, ஒன்பதாவது படிக்கிறோம் 1988)

முகி.. எங்களைப்போல  நல்ல நட்பைதேடிக்கொள்.... காலம் முழுவதும் அது உன்னை காக்கும்... பிறகு உலகில் யாருக்கும் பயப்படத்தேவையில்லை... # சென்னைத்தமிழன்

posted under | 0 Comments

அடிப்படை விதிகள் வினா எண் 7

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண் 7

கேள்வி - ஒரு அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கிறது. அவர் இன்னும் நான்கு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார். அவருக்கு ஓய்வூதிய பிரேரணை விண்ணப்பத்தினை மாநிக கணக்காயருக்கு அனுப்பலாமா?

பதில் -  அனுப்ப முடியாது. ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகள் முடிவுற்றால்தான் நாம் பிரேரணையினை அனுப்ப முடியும். ஒரு வேலை நீங்கள் பிரேரணை அனுப்பிய பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால் உடனடியாக மாநில கணக்காயருக்கு தெரிவிக்க வேண்டும். ஆதாரம் Govt Lr. No. 69332/Pension/93-2 fnance Dt 16.8.93 # சிவதி, TNRDOA, 7871336611

அடிப்படை விதிகள் வினா எண் 6

நானே கேள்வி நானேபதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண். 6

கேள்வி - பணிக்காலத்தில் அரசு ஊழியர் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு உடனடியாக செய்க்கூடிய அரசு சலுகை என்ன?

பதில் - இறந்த அரசு ஊழியர் குடும்பத்திற்கு ஈமச்சடங்கு தொகையாக ரூ.5000/- (ஐந்தாயிரம் மட்டும்) வழங்கலாம். இத்தொகையினை அரசு ஊழியர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடத்தில் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது.

இதற்கென அலுவலுகத் தலைவர் ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. தன்னிடம் கையிருப்பில் உள்ள எவ்விதமான நிதியிலிருந்தும் வழங்கலாம். பின்னர் பட்டியல் அனுப்பி ஈடு செய்ய வேண்டும். (இந்த இடத்தில் அலுவலகத் தலைவர் கருணையுடனும் அதே நேரத்தில் திறமையாகவும் செயல்பட வேண்டும்)

குடும்ப நல நிதித்தொகை கணக்கில் பற்று எழுதி அவரது குடும் நல நிதித்தொகை பெறும் போது அதில் ஈடு செய்ய பட்டியல் அனுப்ப வேண்டும். அந்த தொகையினை பெற உரிமை உள்ளவர் மற்ற பட்டியலில் பிடித்தம் செய்யக் கோரினாலும் அவ்வாறு பிடித்தம் செய்து கொள்ளலாம்.

அரசு கடிதம் எண். 63811/ ஓய்வூதியம்/92-1 நிதித்துறை நாள். 15.7.1992 # சிவதி,TNRDOA, 7871336611


அடிப்படை விதிகள் வினா எண் 5

நானே கேள்வி # நானே பதில் # சிவதி - அடிப்படை விதிகள் வினா எண் 5


கேள்வி - நைனா...நைனா… Undisbursed Pay Register  அப்படின்னா என்னா நைனா..

பதில் - நல்ல வேளை. இப்போவாவது கேட்டியே. கருவூலத்தில இருந்து நீ எந்த பட்டியல் தொகை வாங்கி வந்தாலும் அந்த தொகைய உரியவர் கிட்ட கொடுத்து ஒப்புதல் வாங்கனும். கூடுமான வரைக்கும் அன்றய நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கனும்.

ஒரு வேளை உன்னால கொடுக்க முடியாத மாதிரி சந்தர்பம் வந்ததுன்னா அதை Undisbursed Pay Registerல எழுதி பதியனும். இதுக்கும் ஒரு கால கெடு உண்டு அத மூனு மாசம் வரைக்கும் வச்சிருக்காலம். அதுக்கும் மேல அந்த தொகைய கொடுக்க முடியலைன்னா அத கருவூலத்துல அதாம் டிரெஷெரியில கட்டிறனும். புரிஞ்சுதா.

இப்போ பெரும்பாலும் ECS  இருக்கு அதனால இது போன்ற நிகழ்வு வர்ரதில்லை. ஆனால சில பட்டியலுக்கு இது மாதிரி நேர்வு வரும் . அப்போ இதை மிகச்சரியாக கடைபிடிக்கனும். S.R. 26 T.R.10, TAMILNADU TREASURY CODE VOL 1)

சரியான விதிமுறைகளை கடைபிடிப்பவன்தான் ஜித்து ஜிங்காடி நைனா…# சிவதி

அடிப்படை விதிகள் வினா எண் 4

நானே கேள்வி நானே பதில் # சிவதி  - அடிப்படை விதிகள் வினா எண். 4

கேள்வி - தகுதிகாண் பருவம் என்பது அந்த குறிப்பிட்ட நாட்களில் விடுப்பின்றி அலுவலகம் வருவது அப்படித்தானே….

பதில் - இல்லை. அவ்வாறு கருத முடியாது. உங்களது தகுதி காண் பருவத்தில் குற்றச்சாட்டுகள் காரணமாக உங்கள் பணி நிறைவாக இல்லை என உங்கள் அதிகாரி கருதினால் நீங்கள் திறமையற்றவர் என கருதுவாரானால் உங்களது தகுதிகாண் பருவத்தை நீட்டிக்க அவருக்கு உரிமை உண்டு. அது மட்டுமல்ல உங்களை பணியிலிருந்தே விடுவிக்கவும் கூட அவர் நடவடிக்கை எடுக்கலாம். அதற்கான அதிகாரம் மேல் அலுவலருக்கு வழங்கப் பட்டுள்ளது

ஆதாரம் Rule 27 (C)  of Tamil Nadu State and Subordinate Service Rules # சிவதி, TNRDOA, 7871336611

அடிப்படை விதிகள் கே 3

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் # வினா எண் 3

கேள்வி - அய்யா வணக்கம் நான் ஊராட்சி உதவியாளராக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது இ.நி.உ. ஆக பணிபுரிந்து வருகிறேன். நான் ஊராட்சி ஊராட்சி செயலராக இருந்த போதே துறைத் தேர்வுகளில் மூன்று பாடங்கள் தேர்வடைந்துவிட்டேன்.  என்னுடைய பதவி உயர்வுக்கு நானிப்போது இதர தேர்வு மட்டும் எழுதினால் போதும்தானே?

பதில் - ஆமாம். ஒருவர் தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு முன்பாக தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை உள்ளது.

    எனவே நீங்கள் ஊராட்சி செயலர் பதவியில் தேர்ச்சி அடைந்த பாடங்களை உரிய அடையாளச்சீட்டுடன் பணிப்பதிவேட்டில்  அலுவலகத் தலைவரிடம் சான்று பெறுங்கள். நிகர உள்ள பாடங்களை தகுதிகாண் பருவத்திற்குள் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்.

ஏற்கனவே தேர்ச்சி அடைந்த பாடத்தினை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.  ஆதாரம்  Rule 15, Tamilnadu State and Subordinate Service Rules) # சிவதி TNRDOA, 7871336611

அடிப்படை விதிகள் கே2

நானே கேள்வி  # நானே பதில் # சிவதி, அடிப்படை விதிகள் வினா எண் 2

கேள்வி - தகுதிகாண் பருவத்தில் விடுப்பு எடுக்கலாமா?

சிவதி பதில் - தற்செயல் விடுப்பு எடுத்தால் பிழையொன்றும் இல்லை. . தாராளமாக எடுக்கலாம் அது தவிர்த்த பிற விடுப்புகள் அனைத்தும் தகுதிகாண் பருவத்தில் எடுத்தால் உங்கள் தகுதிகாண் பருவம் தள்ளிப் போகும்.

அது மட்டுமல்ல அவ்விடுப்புகள் அரசு விடுமை நாளுடன் சேர்த்து எடுத்தால் அதுவும் கணக்கீடு செய்யப்பட்டு தகுதிகாண் பருவம் தள்ளிப்போகும் என்பதை உணர வேண்டும். இது உங்களோட அடிப்படை விதியிலேயே இருக்குங்க.. படிச்சுப்பாருங்க. தெரியும் # சிவதி TNRDOA, 7871336611

Older Posts
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments