அடிப்படை விதிகள் வினா எண் 7

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண் 7

கேள்வி - ஒரு அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கிறது. அவர் இன்னும் நான்கு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார். அவருக்கு ஓய்வூதிய பிரேரணை விண்ணப்பத்தினை மாநிக கணக்காயருக்கு அனுப்பலாமா?

பதில் -  அனுப்ப முடியாது. ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகள் முடிவுற்றால்தான் நாம் பிரேரணையினை அனுப்ப முடியும். ஒரு வேலை நீங்கள் பிரேரணை அனுப்பிய பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால் உடனடியாக மாநில கணக்காயருக்கு தெரிவிக்க வேண்டும். ஆதாரம் Govt Lr. No. 69332/Pension/93-2 fnance Dt 16.8.93 # சிவதி, TNRDOA, 7871336611

அடிப்படை விதிகள் வினா எண் 6

நானே கேள்வி நானேபதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண். 6

கேள்வி - பணிக்காலத்தில் அரசு ஊழியர் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு உடனடியாக செய்க்கூடிய அரசு சலுகை என்ன?

பதில் - இறந்த அரசு ஊழியர் குடும்பத்திற்கு ஈமச்சடங்கு தொகையாக ரூ.5000/- (ஐந்தாயிரம் மட்டும்) வழங்கலாம். இத்தொகையினை அரசு ஊழியர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடத்தில் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது.

இதற்கென அலுவலுகத் தலைவர் ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. தன்னிடம் கையிருப்பில் உள்ள எவ்விதமான நிதியிலிருந்தும் வழங்கலாம். பின்னர் பட்டியல் அனுப்பி ஈடு செய்ய வேண்டும். (இந்த இடத்தில் அலுவலகத் தலைவர் கருணையுடனும் அதே நேரத்தில் திறமையாகவும் செயல்பட வேண்டும்)

குடும்ப நல நிதித்தொகை கணக்கில் பற்று எழுதி அவரது குடும் நல நிதித்தொகை பெறும் போது அதில் ஈடு செய்ய பட்டியல் அனுப்ப வேண்டும். அந்த தொகையினை பெற உரிமை உள்ளவர் மற்ற பட்டியலில் பிடித்தம் செய்யக் கோரினாலும் அவ்வாறு பிடித்தம் செய்து கொள்ளலாம்.

அரசு கடிதம் எண். 63811/ ஓய்வூதியம்/92-1 நிதித்துறை நாள். 15.7.1992 # சிவதி,TNRDOA, 7871336611


அடிப்படை விதிகள் வினா எண் 5

நானே கேள்வி # நானே பதில் # சிவதி - அடிப்படை விதிகள் வினா எண் 5


கேள்வி - நைனா...நைனா… Undisbursed Pay Register  அப்படின்னா என்னா நைனா..

பதில் - நல்ல வேளை. இப்போவாவது கேட்டியே. கருவூலத்தில இருந்து நீ எந்த பட்டியல் தொகை வாங்கி வந்தாலும் அந்த தொகைய உரியவர் கிட்ட கொடுத்து ஒப்புதல் வாங்கனும். கூடுமான வரைக்கும் அன்றய நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கனும்.

ஒரு வேளை உன்னால கொடுக்க முடியாத மாதிரி சந்தர்பம் வந்ததுன்னா அதை Undisbursed Pay Registerல எழுதி பதியனும். இதுக்கும் ஒரு கால கெடு உண்டு அத மூனு மாசம் வரைக்கும் வச்சிருக்காலம். அதுக்கும் மேல அந்த தொகைய கொடுக்க முடியலைன்னா அத கருவூலத்துல அதாம் டிரெஷெரியில கட்டிறனும். புரிஞ்சுதா.

இப்போ பெரும்பாலும் ECS  இருக்கு அதனால இது போன்ற நிகழ்வு வர்ரதில்லை. ஆனால சில பட்டியலுக்கு இது மாதிரி நேர்வு வரும் . அப்போ இதை மிகச்சரியாக கடைபிடிக்கனும். S.R. 26 T.R.10, TAMILNADU TREASURY CODE VOL 1)

சரியான விதிமுறைகளை கடைபிடிப்பவன்தான் ஜித்து ஜிங்காடி நைனா…# சிவதி

அடிப்படை விதிகள் வினா எண் 4

நானே கேள்வி நானே பதில் # சிவதி  - அடிப்படை விதிகள் வினா எண். 4

கேள்வி - தகுதிகாண் பருவம் என்பது அந்த குறிப்பிட்ட நாட்களில் விடுப்பின்றி அலுவலகம் வருவது அப்படித்தானே….

பதில் - இல்லை. அவ்வாறு கருத முடியாது. உங்களது தகுதி காண் பருவத்தில் குற்றச்சாட்டுகள் காரணமாக உங்கள் பணி நிறைவாக இல்லை என உங்கள் அதிகாரி கருதினால் நீங்கள் திறமையற்றவர் என கருதுவாரானால் உங்களது தகுதிகாண் பருவத்தை நீட்டிக்க அவருக்கு உரிமை உண்டு. அது மட்டுமல்ல உங்களை பணியிலிருந்தே விடுவிக்கவும் கூட அவர் நடவடிக்கை எடுக்கலாம். அதற்கான அதிகாரம் மேல் அலுவலருக்கு வழங்கப் பட்டுள்ளது

ஆதாரம் Rule 27 (C)  of Tamil Nadu State and Subordinate Service Rules # சிவதி, TNRDOA, 7871336611

அடிப்படை விதிகள் கே 3

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் # வினா எண் 3

கேள்வி - அய்யா வணக்கம் நான் ஊராட்சி உதவியாளராக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது இ.நி.உ. ஆக பணிபுரிந்து வருகிறேன். நான் ஊராட்சி ஊராட்சி செயலராக இருந்த போதே துறைத் தேர்வுகளில் மூன்று பாடங்கள் தேர்வடைந்துவிட்டேன்.  என்னுடைய பதவி உயர்வுக்கு நானிப்போது இதர தேர்வு மட்டும் எழுதினால் போதும்தானே?

பதில் - ஆமாம். ஒருவர் தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு முன்பாக தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை உள்ளது.

    எனவே நீங்கள் ஊராட்சி செயலர் பதவியில் தேர்ச்சி அடைந்த பாடங்களை உரிய அடையாளச்சீட்டுடன் பணிப்பதிவேட்டில்  அலுவலகத் தலைவரிடம் சான்று பெறுங்கள். நிகர உள்ள பாடங்களை தகுதிகாண் பருவத்திற்குள் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்.

ஏற்கனவே தேர்ச்சி அடைந்த பாடத்தினை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.  ஆதாரம்  Rule 15, Tamilnadu State and Subordinate Service Rules) # சிவதி TNRDOA, 7871336611

அடிப்படை விதிகள் கே2

நானே கேள்வி  # நானே பதில் # சிவதி, அடிப்படை விதிகள் வினா எண் 2

கேள்வி - தகுதிகாண் பருவத்தில் விடுப்பு எடுக்கலாமா?

சிவதி பதில் - தற்செயல் விடுப்பு எடுத்தால் பிழையொன்றும் இல்லை. . தாராளமாக எடுக்கலாம் அது தவிர்த்த பிற விடுப்புகள் அனைத்தும் தகுதிகாண் பருவத்தில் எடுத்தால் உங்கள் தகுதிகாண் பருவம் தள்ளிப் போகும்.

அது மட்டுமல்ல அவ்விடுப்புகள் அரசு விடுமை நாளுடன் சேர்த்து எடுத்தால் அதுவும் கணக்கீடு செய்யப்பட்டு தகுதிகாண் பருவம் தள்ளிப்போகும் என்பதை உணர வேண்டும். இது உங்களோட அடிப்படை விதியிலேயே இருக்குங்க.. படிச்சுப்பாருங்க. தெரியும் # சிவதி TNRDOA, 7871336611

அடிப்படை விதிகள் வினா 1

நானே கேள்வி நானே பதில் # சிவதி . அடிப்படை விதிகள் - வினா 1

கேள்வி - ஒரு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது தீடீரென இறந்துவிட்டார்.  அவரது குடும்ப ஓய்வூதியம் பற்றி…

சிவதி பதில் - குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் பணிக்காலத்தில் இறந்துவிட்டால் முதலில் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கருத வேண்டும். எனவே அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கலாம்.

ஆதாரம் அரசாணை எண். 2999, Public (Ser-B) Det dt. 4.12.1969 # சிவதி TNRDOA, 7871336611

தேர்தல் கேள்வி பதில் 21

நானே கேள்வி # நானே பதில் # சிவதி # கேள்வி 21


கேள்வி - நான் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலின் உ. தே. ந. அலுவலர்.  வேட்பாளர் உறுதி செய்யப்பட்ட பின்பு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது அவர்களுக்கு சின்னத்தின் பெயரை சொல்லி அனுப்பினால் போதும்தானே?


பதில் - இல்லை. அவர்களுக்கு போட்டியிடும் மாதிரி சின்னத்தின் ஒளிநகலினை கட்டாயம் வழங்க வேண்டும்.  மாநில தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி அவர்களுக்கு வண்ணத்தாளில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் வழங்கினால் போதுமானது.

அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையம் எப்படி குறிப்பிடுகிறதோ அந்த மாதிரியைத்தான் நகலெடுத்து தரவேண்டும். சுற்றறிக்கை எண். சி 41 நாள். 2016.

  உதாரணத்திற்கு ஒரு வேட்பாளருக்கு Hand Roller சின்னம் குலுக்கலில் வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.

 நீங்கள் அவருக்கு Hand Roller என வாய்மொழியாக சொல்லி அனுப்பி விடுவீர்களேயானால் அவர் தமது மனதில் Road Roller ஐ நினைத்துக் கொண்டால்  விரீதமாகிவிடும். எனவே அவருக்கு குலுக்கலில் வரும் சின்னத்தின் மாதிரியினை நகலெடுத்து அளித்துவிடுவது உத்தமம்.   # சிவதி TNRDOA 7871336611

தேர்தல் கேள்வி பதில் 22

நானே கேள்வி # நானே பதில் # சிவதி . உள்ளாட்சித்தேர்தல் கேள்வி -22

கேள்வி -  நான் வாக்குச்சாவடி அலுவலர் 1 ஆக நியமிக்கப் பட்டுள்ளேன்.  6 மாத கைக்குழந்தை வைத்துள்ளேன். நான் பணி செய்யும் வாக்குச்சாவடியில் என்னுடையை குழந்தையை தனியே வைத்து பராமரித்துக்கொள்ள அனுமதி உண்டுதானே… யாரும் மறுப்புத் தெரிவிக்க மாட்டார்களே?..

பதில் -  சகோதரிக்கு வணக்கம். உங்களுக்கு கைக்குழந்தை இருப்பதை சான்றுடன் உங்களது தேர்தல் அலுவலருக்கு கடிதம் வாயிலாக விண்ணப்பம் ஒன்றை அளியுங்கள்.  மாநில தேர்தல் ஆணையம் பாலூட்டும் தாய்மார்கள், கர்பிணிப் பெண்கள் மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளித்து சுற்றறிக்கை (எண். சி 50 நாள் 1.10.16) வழங்கியுள்ளது. எனவே நீங்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்  # சிவதி TNRDOA 7871336611

Newer Posts Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments