முட்ட பிரியாணி அரசியல்



நம் அரசியல் விசித்திரமானது...


நம் விவசாயி முப்போகமும் விளைவித்து உலகிற்கு அளிக்கிறான்


ஆனால்...


இலவச அரிசிக்கு ரேஷன் வரிசையில் நிற்கிறான்.


இந்திய வேர்ஹவுஸ் கோடவுனில் மக்கிப்போன மனிதர்களின் உணவை எலி சாப்பிடும்...


பஞ்சம் பட்டினியின் போது காவிரி டெல்டா விவசாயி எலியை சாப்பிடுவான்...








குஷ்புவுக்கு பதில் சிம்ரன்

வடிவேலுவுக்கு பதில் சிங்கமுத்து

தியகுவுக்கு பதில் செந்தில்

மெட்ரோ ரயிலுக்கு பதில் மோனோ ரயில்

கலைஞர் வீடு திட்டத்திற்கு பதில் பசுமை வீடு

டீவிக்கு பதில் மிக்சி

மஞ்சள் துண்டுக்கு பதில் பச்சை புடவை



இவன் கஞ்சித்தொட்டி திறப்பான்


அவன் முட்டை பிரியாணி போடுவான்








இருவருமாக சேர்ந்து செய்வது எதாவது உண்டா?


டாஸ்மாக் தண்ணியில தமிழனை மிதக்கவிடுவது


கடல் தண்ணியில செத்துப்போன இராமேஸ்வரம் மீனவன் சமாதிக்கு பூ போடுவது.


அது தவிர இவனுங்க ஏதாவது ஒன்னா செய்வாங்களா?


ஆம் ஒன்னே ஒன்னு இருக்குதே


அது


அண்ணா சமாதிக்கு சுண்ணாம்பு அடிப்பது


போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்


- சென்னைத்தமிழன்

posted under |

1 comments:

thanapathi said...

very nice thinking and compilation

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments