திரும்பத் திரும்ப பேசற நீ..... திரும்பத் திரும்ப....



திரும்பத் திரும்ப பேசற நீ….. திரும்பத் திரும்ப…

கூறியவை கூறல் குற்றம் என நன்னூல் சென்னதின் பிறகு அரைத்த மாவை அரைப்பது பெருங்குற்றமாகவே கருதப்படும். அதற்காகவே ’சொல்லுக சொல்லை பிரிதோர்ச்சொல்’ என்கிறார் வள்ளவ பெருந்தகை.

அதெல்லாம் சரி, காலையில் சாப்பிட்டதே கேள்விக்குறியாகி தொக்கி நிற்கும் போது எழுதிய சொல் எத்தனை முறை மீண்டு முட்டுகிறது என்கிற புள்ளி விவரத்தையெல்லாம் யார் சொல்ல முடியும். சண்டை சந்தடியில் யாராவது ’வார்த்தய அளந்து பேசு’ என்றால் அதுவும் சாத்தியமே என்கிறது ஒரு வலைப்பதிவு.

வலைப்பதிவாளர் நீச்சல்காரன் அதை சாத்தியமாக்கியும் இருக்கிறார். சுளகு என்ற மென்பொருளில் நாம் வடித்த கருத்துக் கோவை(?)யினை மொத்தமாக உள்ளீடு செய்யுங்கள்.

எந்த சொல் மீண்டும் மீண்டும் வருகிறது. எந்த எழுத்து எத்தனை இரட்டை வேடம் எடுக்கிறது என்பதை துள்ளியப் படுத்துகிறது இந்த எழுத்தாய்வுக் கருவி.

ஒரு கூடுதல் செய்தி....
மு.வ வின் திருக்குறள் உரையில் ‘என்று’ எனும் சொல்லும் கலைஞரின் உரையில் ”வேண்டும்” என்ற சொல்லினை அதிகம் பயன்படுத்தியுள்ளார்.

நமது எழுத்துகளை முறைப்படுத்த நீங்களும் இந்த வலைத்தளத்தில் முயன்றால் நலம் #

 சென்னைத்தமிழன்

இணையதள முகவரிhttp://dev.neechalkaran.com/p/sulaku.html#.VqXZipp97IU
Neechalkaran
Sulaku - சுளகு
A Tamil letter Analyzer தமிழ் எழுத்தாய்வுக் கருவி

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments