கபாலி



என்னுடைய கழிவறை தவிர்த்த அனைத்து இடங்களிலும் கபாலி விளம்பரம் காண்கிறேன். எதிர்படும் அனைவரும் கபாலி குறித்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

காதில் விழும் உரையாடல்கள் அனைத்தும் கபாலி குறித்தானதாகவே இருக்கிறது.
ரஜினியை விட அவரது படம் குறித்து பேசுபவர்கள் மீது இனம் புரியாத அருவருப்பு எனக்கு உண்டாகிறது.

அடுத்த வாரத்திற்குள் கபாலி திரைப்படம் பார்காதவர்களை கணக்கெடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துவிடுவார்களோ என் அச்சம் கூட நிலவுகிறது.

தமிழ் இந்து நாளிதழில் சமஸ் ஒரு கட்டுரை எழுதினார். அதில் ’இயனஸ்கோ’வின் ஒரு பிரஞ்சு நாடகம் பற்றி குறிப்பிடுவார். கதையில் ஒருவர் காண்டாமிருகமாவார். அதனை தொடர்ந்து காண்டாமிருகம் தொடர்பான பேச்சுகள் அதிகமாகும். பேச்சுகள் அதிகமாக அதிகமாக அந்த நாட்டில் ஒருவர் தவிர்த்த அனைவருமே காண்டாமிருகமாகி விடுவார்கள்.

சிறிது சிறிதான ஆக்கிரமிப்பை உணராதவர்கள் எவ்வாறு ஆக்கிரமிப்புக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இரையாக நேரிடுகிறது. என்பதை அழகாக காண்டாமிருக கதை மூலம் சொல்லுவார். 

நானும் காண்டாமிருகம் ஆகிவிடுவேனே என்ற அச்சம் என் மனதில் நிலை கொள்ளுகிறது # தலைமீது ஒற்றை கொம்பு இருக்கிறதா என அவ்வப்போது தடவி பார்த்து வருகிறேன்

 # சென்னைத்தமிழன்

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments