கோத்தாரி நினைவுகள் பாகம் 1

கோத்தாரி அனுபவங்கள் …. பகுதி 1

சென்னை பெங்களூர் சாலை அப்போதெல்லாம் அது நான்குவழிச்சாலை அல்ல..  இவ்வளவு அகலம் அல்ல. ஆனால் அழகாக இருக்கும்.  இரு புரமும் புளியமரங்கள்  சாமரம் வீசி சாலையின் பக்கவாட்டு எல்லைகளை காட்டும்.  நெடுஞ்சாலைகள் தானே இந்தியாவின் நாடி நரம்பு.  இதில் முக்கிய நரம்பு இந்த சாலை.  எப்போதும் போக்குவரத்து இருக்கும் ஆனால் போக்குவரத்து  நெரிசல் (Traffic) இருக்காது. இருந்த போதும் போதும் பரபரப்பான சாலை அது.  பூவிருந்தவல்லியில் இருந்து 6கிமீ தொலைவில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தில் அமைந்திருந்தது கோத்தாரி பாலிடெக்னிக்.

அடியேன் + 2 முடித்த கையோடு அங்கு வந்து விண்ணப்பம் பெற வந்தேன்.  SSLC மற்றும் +2 முடித்தவுடன் பலபேரின் கனவுகளை நம் மூளை சுமப்பதாலோ என்னவோ தெரியவில்லை பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டது போல தலை கொஞ்சம் கனமாகவே இருக்கும்.

”மூண்றரையாண்டு படிப்பு,
சான்ட்விட்ச்,

இது ரெகுலர் டிப்லமா அல்ல.

படிக்கும் போதே வேலை…
இல்லை இல்லை படித்து முடித்த உடனே வேலை”

 என்ற  விண்மண்டலத்தில் இருந்து உதிர்ந்த சொற்கள் என் அப்பாவின் காதில் விழுந்தது.
 என் அப்பாவும் “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது…..” என கனவுலகில் மிதலக்கானார்.

அதன் விளைவு நானிப்போது செம்பரம்பாக்கம் செல்லும் கலைவாணிப் பேருந்தில் கடைசி இருக்கையின் அருகில் ஒரு கைகூட பிடிக்க இயலாத கூட்டத்தில் நின்று செம்பரம் பாக்கம் சென்று கொண்டு இருக்கிறேன் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?
வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டறிவதறுகு எடுத்துக்கொண்ட பயண முயற்சிக்கு இணையானது பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம் வருவது.  இருந்தாலுமென்ன
“அட சத்தியமா படிக்கும்போதே வேலைங்க… படிச்சு முடிச்ச உடனே சத்தியமா வேலைங்க… ” என்ற அசரிரி காதில் ஒலிக்க எப்படியோ வந்து சேர்ந்தேன்.

கோத்தாரி என்ற பெயரை அப்போதெல்லாம் ‘பான்பராக் ‘ பாக்கெட்டின் பின்புறம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

 “பான்பராக் கம்பெனி காரங்க எப்படி படிப்பு சொல்லித்தருவாங்க?” என்று மண்டைக்குள் புழு நெளிய.. விடை தேடி கோத்தாரிக்குள் நுழைந்தேன்.
 அப்ளிகேஷன் வாங்கிவிட்டு ஒரு புங்க மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறேன்.

கையில்  Drafter  உடன் அங்கே படிக்கும் மாணவர்கள், நான் கையில் விண்ணப்பத்துடன் பார்த்த போது … சமையல் கட்டில் கரப்பான் பூச்சியை பார்ப்பது போல பார்த்துவிட்டு நகர்ந்தனர்.
நமக்கெல்லாம் உடனே வேலை கெடக்கப்போகுதுன்ற பொறாமையிலதான் அப்படி பாக்குறாங்க என்ற கருத்தில் மாற்று
 இருந்தேன். …

அப்போதெல்லாம் பாலிடெக்னிகில் சீட் கிடைப்பது குதிரைக்கொம்பு… குதிரைக்கு கொம்பு முளைத்ததா… அடுத்த பகுதியில்..

…. தொடரும்..

# சிவதி CMKTI

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments