தேர்தல் கேள்வி பதில் 22

நானே கேள்வி # நானே பதில் # சிவதி . உள்ளாட்சித்தேர்தல் கேள்வி -22

கேள்வி -  நான் வாக்குச்சாவடி அலுவலர் 1 ஆக நியமிக்கப் பட்டுள்ளேன்.  6 மாத கைக்குழந்தை வைத்துள்ளேன். நான் பணி செய்யும் வாக்குச்சாவடியில் என்னுடையை குழந்தையை தனியே வைத்து பராமரித்துக்கொள்ள அனுமதி உண்டுதானே… யாரும் மறுப்புத் தெரிவிக்க மாட்டார்களே?..

பதில் -  சகோதரிக்கு வணக்கம். உங்களுக்கு கைக்குழந்தை இருப்பதை சான்றுடன் உங்களது தேர்தல் அலுவலருக்கு கடிதம் வாயிலாக விண்ணப்பம் ஒன்றை அளியுங்கள்.  மாநில தேர்தல் ஆணையம் பாலூட்டும் தாய்மார்கள், கர்பிணிப் பெண்கள் மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளித்து சுற்றறிக்கை (எண். சி 50 நாள் 1.10.16) வழங்கியுள்ளது. எனவே நீங்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்  # சிவதி TNRDOA 7871336611

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments