தேர்தல் கேள்வி பதில் 21

நானே கேள்வி # நானே பதில் # சிவதி # கேள்வி 21


கேள்வி - நான் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலின் உ. தே. ந. அலுவலர்.  வேட்பாளர் உறுதி செய்யப்பட்ட பின்பு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது அவர்களுக்கு சின்னத்தின் பெயரை சொல்லி அனுப்பினால் போதும்தானே?


பதில் - இல்லை. அவர்களுக்கு போட்டியிடும் மாதிரி சின்னத்தின் ஒளிநகலினை கட்டாயம் வழங்க வேண்டும்.  மாநில தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி அவர்களுக்கு வண்ணத்தாளில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் வழங்கினால் போதுமானது.

அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையம் எப்படி குறிப்பிடுகிறதோ அந்த மாதிரியைத்தான் நகலெடுத்து தரவேண்டும். சுற்றறிக்கை எண். சி 41 நாள். 2016.

  உதாரணத்திற்கு ஒரு வேட்பாளருக்கு Hand Roller சின்னம் குலுக்கலில் வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.

 நீங்கள் அவருக்கு Hand Roller என வாய்மொழியாக சொல்லி அனுப்பி விடுவீர்களேயானால் அவர் தமது மனதில் Road Roller ஐ நினைத்துக் கொண்டால்  விரீதமாகிவிடும். எனவே அவருக்கு குலுக்கலில் வரும் சின்னத்தின் மாதிரியினை நகலெடுத்து அளித்துவிடுவது உத்தமம்.   # சிவதி TNRDOA 7871336611

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments