ஆத்தா நான் பாசாயிட்டேன்


        பத்தாங்கிளாஸ் படிச்சப்ப மொட்டமாடியில சைன்தீட்டா, காஸ்தீட்டான்னு மனப்பாடம் செஞ்சி படிச்சேன். கணக்குப்பாடத்துல மொத மார்க்கும் எடுத்தேன். 20 வருசம் ஓடிப்போச்சி. ஆனா வாழ்க்கையில உனக்கு திரிகோணமிதி தெரிஞ்சாதான் சோறுன்னு ஒருத்தனும் இதுவரைக்கும் சொன்னதில்லை.

குவியாடியின் குவியதூரம்…

டாப்ளர் விளைவு,

நியுட்டனின் மூன்றாம் விதி..

பாஸ்கல்லின் விதி..

பிளமிங்கின் வலக்கை விதி….

எது படிச்சும் விதி விட்ட வழியில நம்ம வாழ்க்கை ஓடிக்கிட்டருக்கு.

ஸ்கூல் படிக்கும்போது மக்கு பய சுகுமாரை வாசலுக்கு வெளிய நிக்க வைப்பார் எங்க கணக்கு வாத்தியார்.

ஆனா இப்ப எங்க ஊருல சுகுமாருதான் பெரிய ஆளு. அந்த கணக்கு வாத்தியார் தன் மகனுக்கு வேளை விஷயமா பயோடேட்டாவோட சுகுமாரு வீட்டு வாசல்ல நின்னத பார்த்தப்பதான் எனக்கு ஒன்னு ஒரச்சது.

பத்தாங்கிளால் பெயில் ஆனாவந்தான் பத்துபேருக்கு வேல கொடுக்கிறான். பர்ஸ்ட் கிளாஸ்ல பாசானவன் எல்லாம் பல்ல இளிச்சிக்கின்னு மாசகூலிக்கு மாரடிக்கிறான்.

பாடத்த சொல்லித்தர பள்ளிக்கூடம்
வாழ்க்கைய சொல்லித்தந்தா எவ்வளவு நல்லா இருக்கும்…..

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments